தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை: செட்டிபாளையம் பந்தய திடலில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த பந்தய வீரர் முதலிடம் பிடித்தார்.

By

Published : Sep 2, 2019, 12:05 AM IST

coimbatore formula 4 Car race

கோவை அடுத்த செட்டிப்பாளையம் பந்தய திடலில் தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயம் கல்லூரிகளுக்கு இடையேயான பந்தயம், பார்முலா 4 ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

தேசிய அளவிலான பார்முலா 4 பந்தய பிரிவில் சென்னையைச் சேர்ந்த பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார். பெண்களுக்கான பார்முலா 4 பந்தய பிரிவில் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த மிரா எர்ட் முதலிடம் பெற்றார்.

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்

மேலும், பந்தயத் திடலில் இரு சக்கர வாகனங்களுக்கான பந்தயமும் நடைபெற்றது. இப்போட்டிகளின் இடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மனதை பதபதைக்கும் இந்த சாகச நிழச்சியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details