தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனவிலங்குகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை - Farmers Meeting

கோயம்புத்தூர்: வனவிலங்குகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வனவிலங்குகளை சுட்ட கொல்ல அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை Coimbatore Farmers Meeting Farmers Meeting Farmers Request for permission to shoot wildlife
Coimbatore Farmers Meeting

By

Published : Mar 1, 2020, 11:39 AM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமியின் உருவம் பொறித்த முகமூடி அணிந்துவந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், "வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை விட்டு வெளியே வந்து பயிர்களை நாசப்படுத்தும் வனவிலங்குகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வனவிலங்குகள் அதிகளவில் வனத்தை விட்டு குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் மக்களும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர்

இது தொடர்பாக மறைந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசாமி பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் வேணுகோபால் குற்றஞ்சாட்டினார்.

மேலும் வனவிலங்குகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வனவிலங்குகளைக் கொல்ல வேண்டும் என்று மனு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வால்பாறையில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details