தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டம்... கோவை விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்! - free electricity scheme cancel issue

கோவை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின் திருத்த சட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Jul 27, 2020, 10:55 PM IST

மத்திய அரசு கொண்டு வரும் அவசர மின்சட்டத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று(ஜூலை 27) பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாய்க்கால்பாளையம் கிராமத்தில் விவசாய சங்கம் , ஏர்முனை இளைஞர் அணி சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கிராமம், விளை நிலங்களில் கறுப்புக் கொடியை ஏற்றிய விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மேலும், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details