தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2020, 3:57 PM IST

ETV Bharat / state

நோட்டு புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

கோவை: கேம்ஃபோர்டு தனியார் பள்ளியில் நோட்டு புத்தகங்களை வைத்து ஆயிரத்து 174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை
திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் கேம்ஃபோர்டு தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உலக சாதனை படைக்கும் நிகழ்வாக, ஆசிரியர்களுடன் இணைந்து ஆயிரத்து 174 சதுர அடியில் புத்தகங்களை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை வரைந்தனர்.

இதற்காக 22 ஆயிரத்து 741 புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி 11 மணியளவில் முடிவடைந்தது.

திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த சுவர் ஓவியம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details