கோவை - திருச்சி சாலையிலுள்ள சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், பிரபல தங்கநகைக் கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் இவர் பணம் கட்டிவந்துள்ளார்.
தவணை முடிந்த நிலையில், நேற்று 38.896 கிராம் எடையிலான, 2 லட்சத்து 43ஆயிரத்து 617 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை வாங்கியுள்ளார். இதையடுத்து பெங்களூர் செல்வதற்காக தனது அம்மாவுடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நகை வாங்கிய பையை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு தவறவிட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபு (37) சாலையில் கிடந்த தங்க நகை பையை எடுத்து, பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தங்க நகை வாங்கிய பையிலிருந்த ரசீதில் காயத்திரியின் முகவரி, செல்போன் எண் ஆகியவை இருந்துள்ளன.