கோவை மதுக்கரைப் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தைத் தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பைப் பெறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தனியார் சிமென்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் கூறுகையில், 'தொழிலாளர்களின் உரிமையைக் கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கொடுப்பனவு (Allowance) ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.