தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2021, 2:20 PM IST

ETV Bharat / state

கோவிட் சிறப்பு அவசர ஊர்தி சேவையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

கோயம்புத்தூர்: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவிட் சிறப்பு அவசர ஊர்தி சேவையைத் தொடங்கிவைத்தார்.

அவசர ஊர்தி சேவையை தொடக்கிவைத்த முதலமைச்சர்
cm stalin opens covid ambulance service at coimbatore

கோவை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்ந நிலையில் கோவை மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ள வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு தற்பொழுது உள்ள வசதிகள் குறித்து மருத்துவர்கள், செவிலியரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கென 50 கோவிட் சிறப்பு அவசர ஊர்திகளை (Covid special Ambulance) திறந்து வைத்தார்.

கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் நிலையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால் அவர்களை அழைத்து வருவதற்கு, இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அவசர ஊர்தி சேவையைத் தொடக்கிவைத்த முதலமைச்சர்!
இதைத்தொடர்ந்து முழுக்கவசம், பிபிஇ உடையணிந்து, கரோனா சிகிச்சைப்பெறும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் சித்திக், மாவட்ட ஆட்சியர் நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:உயிரிழப்பு பதிவில் பழைய விதியை மாற்ற முதலமைச்சரின் தலையீடு தேவை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details