சேலம் செல்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். அப்போது மற்ற மாநிலங்களை போல என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி வலியுறுத்தினார்.
மேலும் என்.பி.ஆர் கணக்கெடுப்பில் 2010ஆம் ஆண்டு இருந்த அம்சங்களே போதும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கை மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.