கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுனில்குமார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது கோவை விமான நிலையம் அருகே உணவகம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். கடந்த மே 2ஆம் தேதி இவரது பேஸ்புக் பக்கம் மற்றும் சில இணையதளங்களில் சிறுமிகளின் ஆபாச புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதை கண்காணித்த கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் ஐபி முகவரியை கொண்டு இவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். பின்னர், அப்பகுதி காவல் நிலையமான செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.