கோயம்புத்தூர்:பந்தய சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், தனியார் தொழில் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இதனை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆன்லைன் மூலம் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து காணொலி வாயிலாக ராஜீவ் சந்திரசேகர் பேசினார். அதில், “விஜயதசமி நன்னாளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு உலகம் முழுவதும் வேகத்தைப் பெற்றுவருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.