தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2021, 6:24 PM IST

ETV Bharat / state

அரிவாளால் தாக்கும் இளைஞர்கள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

CCTV footage of youths attacking with scythes  coimbatore youths attacking with scythes  coimbatore youths attacking with scythes cctv footage  CCTV footage  coimbatore news  coimbatore latest news  crime news  attempt murder  சிசிடிவி காட்சிகள்  அரிவாளால் தாக்கும் இலைஞர்களின் சிசிடிவி காட்சிகள்  கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கும் இலைஞர்களின் சிசிடிவி காட்சிகள்  கொலை முயற்சி  கொலை முயற்சி சிசிடிவி காட்சிகள்  குற்றச் செய்திகள்
அரிவாளால் தாக்கும் இளைஞர்கள்

கோயம்புத்தூர்:உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வாவிற்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சூரியா, தனது அண்ணன் கார்த்தியிடம் கூறியுள்ளார். அப்போது கார்த்தி செல்வாவை கண்டித்துள்ளார். இதனால் செல்வாவிற்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்; தகாத வார்த்தைகள் பேசி சண்டையிட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் நேற்று (ஜூலை 8) கார்த்தி அவரது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும்போது, செல்வா தன்னுடைய நண்பர்களுடன் வந்து கார்த்தியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பி சென்றார்.

இதில் கார்த்தியின் கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்படவே, அவரது நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பீளமேடு காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் சாலையில் இளைஞர்கள் அரிவாளால் தாக்கிக்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் டிஜிபி அலுவலகத்தில் புகார்...

ABOUT THE AUTHOR

...view details