தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ - pollachi sexull harassment case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கடந்த ஜனவரி மாதம் மூன்று பேரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அலுவலர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

cbi-files-addition-chargesheet-on-pollachi-sexull-harassment-case
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த சிபிஐ

By

Published : Aug 27, 2021, 4:42 PM IST

கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த சிபிஐ அலுவலர்கள், கடந்த ஜனவரி மாதம் இவ்வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகியோரை கைது செய்தனர்.

கூடுதல் குற்றப்பத்திரிக்கை

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கூடுதலாக இவ்வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அலுவலர்கள் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

6 மாதத்திற்குள் விசாரணை முடிக்க உத்தரவு

கைதான 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு விசாரணையானது தொடங்கப்பட்ட இருக்கிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இவ்வழக்கினை தினமும் விசாரித்து ஆறு மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஒன்பது பேருக்கும் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிடாதீர்!

ABOUT THE AUTHOR

...view details