தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2019, 7:41 PM IST

ETV Bharat / state

நீர்நிலைகளை அரசு நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்

கோவையில் செங்குளத்தின் நடுவே விதிமுறைகளை மீறி குடிசை மாற்று வாரியம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்

கோவை குனியமுத்தூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கைகொடுக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த செங்குளம், அண்மையில் தன்னார்வலர்களின் முயற்சியினால் தூர்வாரப்பட்டது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறும் வகையில் குளத்தை இரண்டாக பிரித்து குளத்தின் நடுவே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைத்துள்ளது அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்திற்கு நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலையை தார்சாலையாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.


இது குறித்து சமூக செயற்பாட்டாளர் செந்தில்குமார் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் அரசு நிறுவனங்கள் செயல்படுகிறது. குளத்தின் நடுவே சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல எனக் கூறினார்.

இது குறித்து பொதுப்பணித்துறை சிறப்பு திட்ட இயக்குநர் ஜெயபிரகாஷிடம் கேட்டபோது,

குளத்தில் நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் எதும் நடைபெறவில்லை குடிசை மாற்று வாரிய பணிகள் விரைந்து நடப்பதற்காக தற்காலிக மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details