தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2021, 4:52 PM IST

Updated : Aug 7, 2021, 5:01 PM IST

ETV Bharat / state

கோவை சாதிய கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவையில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கு.ராமகிருஷ்ணன் பேட்டி
கு.ராமகிருஷ்ணன் பேட்டி

கோயம்புத்தூர்:கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கோபால்சாமி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, அரசு அலுவலரிடம் கையை நீட்டி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் கோபால்சாமி திட்டியுள்ளார்.

மேலும், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையைவிட்டு நீக்கி விடுவதாகவும் கோபால்சாமி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கண்ணீர்விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

கு.ராமகிருட்டிணன் பேட்டி

இச்சம்பவத்தை கண்டித்து அன்னூர் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், "சாதி ரீதியாக நடத்தப்பட்ட இந்த சம்பவம் முத்துசாமிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் இருதரப்பினரையும் அன்னூர் காவல் துறையினர் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இது ஏற்புடையது அல்ல. கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:தங்கம் விலை தொடர் சரிவு: பொன்நகை வாங்க குவியும் பெண்கள்!

Last Updated : Aug 7, 2021, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details