தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்; மீன் வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பொள்ளாச்சியில் 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

By

Published : Dec 20, 2022, 10:55 PM IST

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்-மீன் வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு
பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்-மீன் வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

கோவை:பொள்ளாச்சி பாலக்காடு சாலை ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் 49. நேற்று முன்தினம் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது சிறுமியிடம், சிவகுமார் பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும் என அழைத்துள்ளார்.

சிறுமியிடம் மூட்டை தூக்கும் கொக்கி காட்டி மிரட்டி, பாழடைந்த வீட்டுக்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

சிறுமி சிவகுமாரை தள்ளிவிட்டு வெளியே வந்து தன் வீட்டில் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்; கணவர் போலீசில் புகார்

ABOUT THE AUTHOR

...view details