தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணி தவறவிட்ட பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கார் ஓட்டுநர்! - கால்டாக்ஸி ஓட்டுநர்

கோயம்புத்தூர்: பயணி தவறவிட்ட உடைமையை ஒப்படைத்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டினர்.

call
call

By

Published : Feb 20, 2021, 9:37 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாப்புதூர் பகுதியில் கால் டாக்ஸி நிறுவனத்தை நடத்திவருவபவர் பாபி. இவர், நேற்று (பிப்.19) வழக்கம் போல் காரை எடுத்து சவாரிக்குச் சென்றார். இந்தநிலையில், நேற்றிரவு (பிப்.19) பாபியின் கால் டாக்ஸியில் பயணித்த பயணி ஒருவர் அவரை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, தன்னுடைய கைப்பையைக் காரிலேயே விட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பாபி தனது காரில் தேடி பார்த்த போது சீட்டிற்குப் பின்னால் பை ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து அப்பயணியை மீண்டும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, பை குறித்தான விபரங்களை கேட்டறிந்தார். அவரும் பையின் அடையாளங்களைச் சரியாக தெரிவித்தார்.

பயணியின் பையை பாபி பந்தயசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுவதாகவும், அங்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறும் அவரிடம் தெரிவித்தார். அதன்படி, இன்று (பிப்.20) காலை பாபி பந்தய சாலை காவல் நிலையத்தில் பையை ஒப்படைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட பயணியிடமும் தகவலும் தெரிவித்தார். பின்னர், பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டினர்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சரின் கார் ஓட்டுநர் மகள் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details