தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கோவை: செங்கல் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் அதில் சென்ற டீக்கடைக்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

By

Published : Jul 6, 2020, 10:49 PM IST

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

கோவை அடுத்த மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (68). இவர் அனுபவி சுப்பிரமணியன் கோயில் அருகில் டீக்கடையில் வேலை செய்து வந்தார்.

இன்று காலை அவர் மாங்கரையில் இருந்து டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வழியில் செங்கல் ஏற்றி வந்த லாரி அவர் மீது மோதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த மக்கள் லாரியை மடக்கிப் பிடிப்பதற்குள் ஓட்டுநர் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி டயர் வெடித்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details