தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்பு - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்பு
வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்பு

By

Published : Sep 28, 2021, 10:27 PM IST

கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ராகுல், பிரணவ், சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 5 பேர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். இவர்கள் வாளையாறு அணையில் குளிக்கையில் ஆழமான பகுதிக்கு சென்ற சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து வாளையாறு காவல் துறையினர், 20 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (செப்.28) காலை பூர்ண ஈஸ்வரன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் சஞ்சய், ஆண்டோ உடல்களை கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட மற்ற இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது- எஸ்.பி. ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details