தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2019, 2:57 AM IST

ETV Bharat / state

5 மணி நேரத்தில் கைப்பை தைத்து கின்னஸ் சாதனை முயற்சி!

கோவை: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 66 அடி உயரம், 33 அடி அகலத்தில் பிரமாண்ட சணல்பை உருவாக்கப்பட்டது.

kovai

கோவை பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி, சந்திரன் யுவா பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 66 அடி உயரம், 33 அடி அகலம் அளவில் பிரமாண்ட சணல் பையினை உருவாக்கின. பார்வையற்ற மாற்று திறனாளிகள் 9 பேர் இந்த சணல்பையினை 5 மணி நேரத்தில் உருவாக்கினர். இவர்களுக்கு திருநங்கைகளும், சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்களும் உதவிகரமாக இருந்து பிரமாண்ட சணல் பையினை உருவாக்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. துணி, சணல் பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கண் தெரியாதவர்கள் மிகப்பெரிய பை தயாரிப்பது இதுவே முதல் முறை எனவும், ஒரு மாதத்தில் கின்னஸ் சாதனை பதிவு செய்யப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

கின்னஸ் சாதனை முயற்சி!

பார்வையற்றோர் 9 பேரும் சேர்ந்து மிஷினை பயன்படுத்தி இந்த பையை உருவாக்கினோம் எனவும், மிஷன் மூலம் இந்த சணல் பையை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உதவினார்கள் எனவும், தங்களுக்கு இந்த சணல் பை செய்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

சமூகத்தில் அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்படும் போது இதில் எங்களையும் கலந்து கொள்ள வைத்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது என்று திருநங்கைகள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட சணல் பையானது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details