தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரியான நேரத்தில் ஒலி எழுப்பிய அலாரம் - தப்பிய பல கோடி வங்கி பணம் - Robbery

கோவை: வங்கியில் கொள்ளையடிக்க முயன்றபோது சரியான நேரத்தில் அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்பிலான பணம் காப்பாற்றப்பட்டது. கொள்ளையில் ஈடுபட முயன்று தப்பியோடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை

By

Published : Jul 12, 2019, 3:12 PM IST

கோவை மாவட்டம் அன்னூர் அவிநாசி சாலையில் கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகிலேயே ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வழக்கம்போல் வங்கி பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு நேற்று (வியாழக்கிழமை) சென்றுள்ளனர். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் வங்கியில் இருந்து அபாய ஒலி வந்துள்ளது. இதனைக் கேட்ட அருகிலிருந்தவர்கள் அன்னூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், வங்கி ஊழியர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது வங்கியின் பின்புற ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.

துளையிடும் மிசினை கொண்டு பாதுகாப்பு பெட்டக அறையை துளையிட முயன்றபோது அபாய ஒலி எழுப்பியதால் அவர்கள் பாதியிலேயே தப்பி ஓடியுள்ளனர். மேலும் உரிய நேரத்தில் அலாரம் அடித்ததால் பல கோடி ரூபாய் தப்பியது.

இதனையடுத்து அங்கு பதிவான கைரேகைகள், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.

சரியான நேரத்தில் அடித்த அலாரத்தால் தப்பியது வங்கி பணம்

கடந்த மாதம் 26ஆம் தேதி இதே முறையில் அன்னூர் அருகே உள்ள ஆந்திரா வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. எனவே இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே ஆட்கள் செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் அன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details