கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளைசாமி (40) மாணவனை ஆட்டோவில் ஏறிக் கொள்ளும் படி கூறி பள்ளியில் விட்டு விடுவதாக கூறியுள்ளார்.
மாணவனும் அவரது பேச்சை நம்பி ஆட்டோவில் ஏறிய நிலையில், ஓட்டுநர் வெள்ளைசாமி மாணவனுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.