தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2020, 4:33 AM IST

ETV Bharat / state

கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு - பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

கோவை: சுந்தராபுரம் பகுதியிலுள்ள பெரியாரின் சிலை மீது நள்ளிரவில், சமூக விரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றிய சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிலை அவமதிப்பிற்கு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலை அவமதிப்பிற்கு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலை மீது சமூகவிரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர். சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டிருப்பதைக் காலையில் பார்த்த அப்பகுதியினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்தனர்

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அனைத்து அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தந்தை பெரியார் சிலையின் மீது இதுபோன்ற செயல்களை செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதுபோன்ற கண்டனத்திற்குரிய செயல் வேலை செய்பவர்களை அரசு விட்டு வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவை புலியகுளம் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்றிய சமூக விரோதிகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details