கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார். பின்னர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குள்பட்ட கோல்டுவின்ஸ் துரைசாமி நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் குறித்து பொதுமக்களிடையே பரப்புரை செய்தார்.
பின்னர் நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் மாட்டி வைத்தார். ஏற்கனவே நியாயவிலை கடையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைபடங்கள் வைக்கப்பட்டுள்ளன.