கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு முன்பான கோடைக்கால விலங்குகள் கணக்கெடுப்பு, டிசம்பர் மாதம் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தாண்டுக்கான மழை காலத்திற்கு முன்பான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கி வரும் ஜூன்16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் இன்று தொடங்கிய கணக்கெடுப்பில் 52 இடங்களில் 104 நேர்கோடு பாதைகள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியைத் தொடங்கினர்.