தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! - கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோயம்புத்தூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் போராட்டம்
Anganwadi staff and helpers protest

By

Published : Feb 24, 2021, 6:43 AM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கும் அரசின் அறிவிப்பு, அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம்,என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி (பிப்.22) முதல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: எம்.பி.சி., பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து எம்.எம்.பி.சி.,யாக அறிவிக்க வேண்டும்"

ABOUT THE AUTHOR

...view details