தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் தேர்தலில் அமமுக நிற்காதது வேதனை அளிக்கிறது.

கோவை: வேலூர் தேர்தலில் போட்டியிடாதது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 18, 2019, 5:14 AM IST

கோவை

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் 67ஆவது பிறந்த நாள் விழா நாளை ஆடம்பரமின்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை கண்டு கட்சியை விட்டு செல்பவர்கள் துவண்டு விடுவார்கள், அவர்கள் செல்கின்ற இடத்தில் என்ன நிலைமை என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

வேலூர் தேர்தலில் அமமுக நிற்காதது வேதனையையும் வருத்தத்தையும் தந்தது. பின்னர் அதற்கு தினகரன் தகுந்த விளக்கம் அளித்தார் என கூறியவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தற்போது சோர்வாக உள்ளது, விரைவில் மீண்டு எழுவோம் என தெரிவித்தார்.

வேலூர் தேர்தலில் போட்டியிடாதது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி

மேலும், சசிகலா அவர்களின் விடுதலைக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே வரும் டிசம்பர் அல்லது பிப்ரவரியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் எனவும் அதுவரை கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details