கோயம்புத்தூர், சிவானந்தகாலனி பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டார். அப்போது அவர் பேசுகையில், ”கொங்கு மண்டல மக்கள் நம்பிக்கை துரோகத்தை அனுமதிக்க மாட்டீர்கள் என்று தெரியும். இன்றைக்கு ஆளும் கட்சியின் கூட்டணி, துரோகக் கூட்டணியாக உள்ளது. இவர்களையும், புரட்சித் தலைவரால் ’தீய சக்தி’ என்று அழைக்கப்பட்ட திமுக கூட்டணி இரண்டையும் ஓடவிட வேண்டும்.
முதியோர் உதவித் தொகையைக்கூட முறையாக கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமியால், எப்படி வீட்டிற்கு 1,500 ரூபாய் தரமுடியும்? எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டிய அலுவர் ஒருவரின் வாகனத்திலிருந்து 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யயப்பட்டது. இவை எல்லாம் யாருடைய பணம்? விவசாயம் செய்து அதில் கிடைத்த பணம் என்றால் விவசாயிகள் என்றோ பணக்காரர்கள் ஆகி இருப்பார்கள். இவர்கள் எத்தனை கோடி செலவு செய்தாலும் அது மக்களின் பணம். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர்களை ஜெயிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.