தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மருத்துவமனையில் திடீரென தீ பிடித்த ஆம்புலன்ஸ் - coimbatore latest news

கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் நேற்று(செப். 24) இரவு திடீரென தீ பற்றி எரிய தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென தீ பிடித்த ஆம்புலம்ஸ்
திடீரென தீ பிடித்த ஆம்புலம்ஸ்

By

Published : Sep 25, 2021, 4:58 PM IST

கோயம்புத்தூர்:அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு சோதனை கிடங்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் நேற்று (செப்.24) இரவு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

திடீரென தீ பிடித்த ஆம்புலன்ஸ்

ஆனால், தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பு ஆம்புலன்ஸின் முன் புறம் முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பும், இது போன்று ஆம்புலன்ஸ் ஒன்று தீ பிடித்தது. தற்போது, மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் தீ பிடித்திருப்பது அங்குள்ள நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே, அனைத்து ஆம்புலன்ஸ்களையும் பழுது பார்க்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details