தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பதி இடையே தகராறு: தூக்கிட்டு கணவர் தற்கொலை - கோவை மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: இடையர்பாளையத்தில் மது பழக்கத்தால் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடும்பத் தகராறால் தூக்கிட்டு தற்கொலை
குடும்பத் தகராறால் தூக்கிட்டு தற்கொலை

By

Published : May 25, 2020, 11:23 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்(38). இவர், மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

பிரதீப்குமாரின் அட்டூழியத்தைத் தாங்கமுடியாமல் அவரை மது பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக கோவில்பாளையம் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து தப்பிய அவர், மீண்டும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது குறித்து அவரது மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர், பிரதீப்குமாரை எச்சரித்து காவல் நிலையம் வந்து செல்லுமாறும் அதன்பின் மறுவாழ்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த பிரதீப்குமார் அப்பகுதியிலுள்ள சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இன்று காலையில் சுடுகாடு வழியாக சென்றவர்கள் பிரதீப்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறால் தூக்கிட்டு தற்கொலை

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பிரதீப்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details