கோவை: கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று(பிப்.02) காலை மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சோமனூர் சாலையை இரு சக்கர வாகனம் கடக்க முயன்ற போது எதிர் திசையில் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.
இதில் மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.