தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: வழக்குப் பதிந்த காவல்துறை - நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

கோயம்புத்தூர்: அவுட்டு காய் எனப்படும் நாட்டு வெடி தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Country made bomb explosion
வீட்டின் மேல்கூரை

By

Published : Jan 26, 2021, 12:06 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நந்தினி காலனி பகுதியில் நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மணிமாலன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் அவுட்டாய் வெடித்தது.

இந்த விபத்தில் வீட்டின் மேல்கூரை சிதறியது. அவுட்டாய் தாயாரித்துக் கொண்டிருந்த மணிமாலன் (50), பூந்துறை (50), ராஜா (40), ராமராஜ் (35), வெற்றிவேல் (13) ஆகியோருக்கு கை மற்றும் கால்களில் பலத்தக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி தாயாரித்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினரும் தனிகுழு அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.

முன்னதாக, வனப்பகுதிகளில் கைப்பற்றப்பட்ட அவுட்டுக்காய் இவர்கள் தயாரித்ததா? யாரெல்லாம் இவரிடம் அவுட்டுக் காய் வாங்கிச் சென்றார்கள் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பவாரியா கொள்ளை கும்பலை கைதுசெய்ய மூன்று வாரம் காலஅவகாசம் அளிப்பு

ABOUT THE AUTHOR

...view details