தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது! - 4 kg ganja seized at coimbatore

கோவை: பொள்ளாச்சியில் நான்கு கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற மூவரை, காவல் துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

பொள்ளாச்சி
polachi

By

Published : Mar 5, 2021, 10:25 PM IST

கோவை மாவட்டம் ஜமீன்முத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர், தாலுகா காவல் துறையினர் ரோந்துப் பணியில் இன்று (பிப் 5) ஈடுபட்டனர்.

அப்போது, பொள்ளாச்சியிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் நான்கு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

காரில் கஞ்சா கடத்திய கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சித்திக் (39), சம்சுதீன் (37), கேரள மாநிலம் கொல்லங்கோட்டைச் சேர்ந்த மனோஜ் (40) ஆகியோரைக் கைதுசெய்ததுடன், காரில் வைத்திருந்த நான்கு கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல்செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:'மாப்ள ஃபோட்டல பார்த்த மாதிரி இல்ல' - ஓட்டம் எடுத்த மணமகள்!

ABOUT THE AUTHOR

...view details