பொள்ளாச்சியில், நேற்று (மார்ச் 18) பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதனடிப்படையில், காவல் துறை உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரபுதாஸ், காவலர்கள் தனிப்படை அமைத்து காவல் துறையினர் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் வாகன சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஊஞ்சவேலம்பட்டி தனியார் பள்ளி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைச் சோதனை செய்தனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவகுரு, சென்னையைச் சேர்ந்தவெங்கடேஷ், கோபி என்கிற கோபிநாத், வினோத் குமார் என்பது தெரியவந்தது.