கோயம்புத்தூரில் இன்று (அக்டோபர் 21) 314 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 40,690ஆக உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூரில் ஒரேநாளில் 314 பேருக்கு கரோனா - கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
கோயம்புத்தூர்: மாவட்டத்தில் ஒரே நாளில் 314 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
![கோயம்புத்தூரில் ஒரேநாளில் 314 பேருக்கு கரோனா கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:26:42:1603292202-tn-cbe-06-corona-update-photo-script-tn10027-21102020184620-2110f-1603286180-20.jpg)
கரோனா
இன்று ஒரே நாளில் சிகிச்சைப் பெற்று வந்த 394 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 36,411ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527ஆக உயர்ந்துள்ளது.