தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஏழாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

கோயம்புத்தூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Aug 11, 2020, 4:34 AM IST

கரோனா பாதிப்பு: கோவையில் இன்று ஒரே நாளில் 292 பேருக்கு கரோனா உறுதி!
Coimbatore corona cases

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று (ஆக.10) 292 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 961ஆக உயர்ந்துள்ளது. இதில், கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 268ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details