தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகரின் மகன் போக்சோ சட்டத்தில் கைது!

வால்பாறை: 7 வயது சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

By

Published : Mar 16, 2019, 10:13 PM IST

போக்ஸோ சட்டம்

கோவை மாவட்டம், வால்பாறை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திமுக கட்சி ஆதி திராவிடர் நல துணை அமைப்பாளரார உள்ளார். இவரின் மகனான தவின்(17), அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12ஆம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகார் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

போக்ஸோ சட்டம்

பின்னர் சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பெற்றோரின் புகாரை அடுத்து திமுக பிரமுகரின் மகனை, போக்சோமற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details