கோவை:சூலூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரதீப், தன்யா ஆகிய இருவர் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 15 ஆண்டு கால நண்பரான பிரதீப், தனக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் தன்யா என்பவரை தெரியும். அவர் பணம் கொடுத்தால் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவார் என்று ஆசை வார்த்தை கூறினார்.