சென்னை:பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரை தவறாக வழிநடத்துவதாக யூடியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. அதனடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 32 புகார்களின் அடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.