தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 12, 2020, 3:10 AM IST

ETV Bharat / state

தண்டையார்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

சென்னை: தண்டையார்பேட்டையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்களை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

cctv
cctv

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் தேவி (33). இவர் கடந்த 8ஆம் தேதியன்று அவர் வசிக்கும் தெரு வழியாக நடந்துசென்றார். அப்போது அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், தேவியிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் இருந்த கைப்பையை பறித்துச் சென்றனர்.


இதுதொடர்பாக தேவி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (25), சங்கர் குமார் (25) ஆகிய இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

சிசிடிவி காட்சி

பின்னர் அவர்களை கைது செய்த காவல் துறை, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கைப்பையையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:செல்போன் கடையில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details