தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை! - படுகொலை

சென்னை: திருமுல்லைவாயிலில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்
இளைஞர்

By

Published : Jun 5, 2020, 2:54 PM IST

சென்னை திருமுல்லைவாயில் அடுத்த அயப்பாக்கம் அன்சுகம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். மின் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வத்திற்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) காலை பன்னீர் செல்வம் அவரது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்த பாண்டியனை அவரது வீட்டு வாசலில் வைத்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்த பாண்டியன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர், பாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்த பன்னீர் செல்வம் திருமுல்லைவாயில் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு கொண்ட ரவுடி என்பதும் இவர் மீது காவலர் ஒருவரை வெட்டிய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் பன்னீர் செல்வத்தை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details