சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதிலுள்ள 8ஆவது தெருவில் வசித்து வருபவர் மலர்வண்ணன்(23). இவர் வீட்டிற்கு அருகே கேரம்போர்டு வைத்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தபோது டார்வின் என்ற நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் டார்வின் சிறிது நேரம் கழித்து குடித்துவிட்டு மலர்வண்ணன் வீட்டிற்கு சென்று அங்கே இருந்த அவரது சித்தி பிரபாவதி, சித்தப்பா முத்துசெல்வன், மலர்வண்ணன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது.