சென்னை திருவான்மியூரில் உள்ள நியூ பீச் கடற்கரைக்கு 6 இளம் நண்பர்கள் நேற்று (ஆக. 27) சென்றனர். அவர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி இரண்டு இளைஞர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
அதில் பென்ஸ்டன் என்ற வாலிபர் போராடி மீண்டும் கரைக்கு வந்த நிலையில், மற்றொருவர் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து அவரது நண்பர்கள் திருவான்மியூர் காவல் நிலையம், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.