சென்னை: போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்யும் நோக்கத்திலும், சாலை விதிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் 'டிராஃபிக் வார்டன்ஸ்' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2,000 மாணவர்கள் காவல் துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்மூலம் பயிற்சி பெற்று சிறப்பாக செயல்பட்ட பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் குமார் சாரட்கர் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். சேத்துப்பட்டு எம்.சி சி. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு, செய்தியாளர்களை சந்தித்த கபில் குமார் சராட்கர், போக்குவரத்து போலீசார் பல வேளைகளில் ஈடுபடுவதால், அந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள டிராஃபிக் வார்டன் அமைப்பு உருவாக்கியதாகவும், 300 பேர் வார்டன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு வெளியே போக்குவரத்துப் பணிகளை Road Safety Patrol பணிகளை மாணவர்கள் மேற்கொள்வதால், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை டிராஃபிக் வார்டன் அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். 350 பள்ளிகள் 20,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 11 இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்துள்ளோம். அதில் 9 மாற்றங்கள் பலன் கிடைத்து இருப்பதாகவும், 2 மாற்றம் சோதனை முறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 90 விழுக்காடு பொதுமக்கள் பலனடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.