தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2021, 2:47 PM IST

ETV Bharat / state

17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது

ஆசை வார்த்தைக் கூறி 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (27). இவர் சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியில் குடியிருந்துள்ளார். அப்போது தனது வீட்டின் அருகே இருந்த 17 வயது சிறுமியிடம் அன்வர் பாட்ஷா பழகியுள்ளார்.

பின்னர் இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அன்வர் பாட்ஷா சேலையூர் பகுதிக்கு குடிவந்தார். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் அச்சிறுமி தனது தாயாருடன் தாம்பரத்தில் இருக்கும் பி.எஃப் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கிருந்து சிறுமி மாயாமானர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி அன்வர் பாஷாவுடன் சென்றது தெரியவந்தது.

கைதான அன்வர் பாட்ஷா

ஏழு மாதங்களாக காவல் துறையினர், அன்வர் பாட்ஷாவை தேடிவந்த நிலையில், இருவரும் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனே, அவர்களை அங்கிருந்து மீட்ட காவல் துறையினர் தாம்பரம் அழைத்து வந்தனர்.

சிறுமிக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டபோது அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கியதற்காக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் அன்வர் பாட்ஷாவை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details