சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியில் நடந்துச் செல்லும் பெண்களை வழிமறித்து தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது குறித்து பொதுமக்கள் சார்பில் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தனிப்படை காவலர்கள் வழிப்பறி நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கார்த்தி(28) என்பது தெரியவந்தது.