சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தாயுடன் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை மகேஷ் தவறான உறவுக்கு அழைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் கவுசல்யா என்ற பெயரில் மகேஷ் போலியான கணக்கைத் தொடங்கி மீண்டும் மாணவியிடம் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார்.
பெண்தான் என நினைத்து மாணவி அந்தக் கணக்கில் வழக்கம் போல நட்பாகப் பேசியுள்ளார். பெண் போலவே பேசி மாணவியின் அந்தரங்க வீடியோவை வாங்கி அதை செல்போனில் மகேஷ் பதிவு செய்துள்ளார்.