சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம், வைத்தியர் தெரு விரிவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (29). இவரது தம்பி சத்யா (27). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 21ஆம் தேதி அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது அண்ணன் முருகேசன் தம்பிக்கு குறைவாக மது கொடுத்ததால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த தம்பி சத்யா, வீட்டில் காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் முருகேசனை சரமாரியாக குத்தியுள்ளார்.