தமிழ்நாடு

tamil nadu

சூழியல் செயற்பட்டாளர் திஷா ரவியை நிபந்தனை இன்றி விடுவிக்க இளைஞர் அமைப்புகள் கோரிக்கை

திஷா ரவியை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இளைஞர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

By

Published : Feb 15, 2021, 10:03 PM IST

Published : Feb 15, 2021, 10:03 PM IST

young people for politics movement demand to center to release activist disha ravi
திஷா ரவியை நிபந்தனை இன்றி விடுவிக்க இளைஞர் அமைப்புகள் கோரிக்கை

சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிரெட்டா தன்பர்க் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டை சூழியல் செயற்பட்டாளர் திஷா ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனுடன் டூல்கிட்டையும் இணைத்திருந்தார். இந்த டூல்கிட்டை காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த டூல்கிட் சர்ச்சையில், பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். திஷா ரவியின் கைதுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பூவுலகின் நண்பர்கள், அரசியலுக்காக இளைஞர்கள் (young people for politics) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று(பிப்.15) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

சூழியல் செயற்பட்டாளர் திஷா ரவியை நிபந்தனை இன்றி விடுவிக்க இளைஞர் அமைப்புகள் கோரிக்கை

அப்போது பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகர், "நாட்டின் உணவு உற்பத்தியை அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தரகராக செயல்படும் மத்திய அரசு, காலநிலை மாற்றம் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி செயல்படுகிறது.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான ட்வீட்டை, மறு ட்வீட் செய்தார் என்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சூழியல் செயற்பட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டு விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். உரிமைகளைக் கேட்ட திஷா ரவி குற்றவாளி போல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர்களை பயமுறுத்தும் நோக்கோடு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. திஷா ரவியை எவ்வித நிபந்தனையும் இன்றி மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இளைஞர் அமைப்புகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தும். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு இளைஞர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்றார்.

இதையும் படிங்க:டூல்கிட் விவகாரம்: மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்!

ABOUT THE AUTHOR

...view details