தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிட்லபாக்கம் ஏரி

சென்னை: துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் உயிரிழப்பு
நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் உயிரிழப்பு

By

Published : Jan 4, 2021, 3:51 PM IST

சென்னை அடுத்த குரோம்பேட்டை சிட்லப்பாக்கம் பெரியார் நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (29) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் அவர் நேற்று அதே பகுதியில் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

இதையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து சிட்லப்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கிவிட்டார்.

சிட்லபாக்கம் ஏரி
இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் வெளியே வராததால் அவரது நண்பர்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி வெங்கடேசன் இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த சிட்லப்பாக்கம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு மோசடி விவகாரம் - இடைத்தரகரை தேடும் போலீஸ்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details