சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை அந்த பணிக்கு நியமித்து அனுப்பியுள்ளார். ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். ஆனால் ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரையும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.